நேரம் மாற்றத்தை தெரிவிக்காததால் 32 பயணிகள் சிங்கப்பூர் விமானத்தை தவறவிட்டனர்

அமிர்தசரஸ்: பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை 7.55மணிக்கு சிங்கப்பூர் செல்லும் ஸ்கூர் ஏர்லைன் விமானம் புறப்படுவதாக இருந்தது. ஆனால் திடீரென விமானம் புறப்படும் நேரம் மாலை 4 மணிக்கு என மாற்றப்பட்டது.

அனைத்து விமான பயணிகளுக்கும் விமான நிறுவனம் சார்பாக இமெயில் மற்றும் சம்பந்தப்பட்ட முகவர்கள் சார்பாக விமானத்தின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அமிர்தசரசை சேர்ந்த முகவர் ஒருவர் தான் டிக்கெட் பதிவு செய்து கொடுத்த 32 பயணிகளுக்கு விமான நேரம் மாற்றப்பட்டது குறித்த தகவலை தெரிவிக்க தவறிவிட்டார். இந்நிலையில் 4 மணிக்கு விமானம் புறப்பட்டு சென்றது. தாமதமாக விமான நிலையம் வந்த 32 பயணிகள் விமானத்தை தவறவிட்டனர்.

Related Stories: