நெல்லை: ‘ஒன்றிய அரசு உதவியால்தான் அதிமுக ஆட்சி 4 ஆண்டு நீடித்தது’ என்று பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லை தச்சநல்லூரில் நேற்று நடந்த விழாவில் பங்கேற்ற நெல்லை தொகுதி பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி: தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்று தான். அதில் வித்தியாசம் ஒன்றும் இல்லை. பாஜ மக்களவை தேர்தல் பணியை துவங்கி விட்டது. ஒன்றிய அமைச்சர் விகே சிங் வருகிற 27, 28, 29 தேதிகளில் வருகிறார். யார் எப்படி பேசினாலும், ஒருமித்த அதிமுகவின் பலம் வேறு. அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தனியாக போட்டியிட்டால் அது பலவீனம்தான். பாஜ பலம் அடைய வேண்டும் என நினைத்திருந்தால் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியிருக்க மாட்டோம்.