ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்காக பாடுபடுவோம்: அமைச்சர் முத்துசாமி பேட்டி

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அவரது வெற்றிக்கு பாடுபடுவோம் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.

ஈரோட்டில் நேற்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அளித்த பேட்டி: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குமலன்குட்டை வரை செல்லும் பெருந்துறை சாலையானது ரூ.6 கோடியே 50 லட்சம் செலவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.  திமுக, காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் யார் வேட்பாளராக போட்டியிட்டாலும் அந்த வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவோம். இவ்வாறு கூறினார்.

Related Stories: