சிவகங்கை: நாட்டரசன்கோட்டையில் நடைபெற்ற செவ்வாய் பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் கண்ணுடையநாயகி அம்மன் கோயில் முன்பு ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் முடிந்து வரும் முதல் செவ்வாய் கிழமை நகரத்தார்களால் செவ்வாய் பொங்கல் விழா நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டுக்கான விழா நேற்று மாலை தொடங்கியது. நகரத்தார் சார்பில் 914 பேர் பொங்கலிட்டனர். இவர்கள் தவிர நேர்த்திக்கடன் வைத்துள்ள நூற்றுக்கணக்கானவர்களும் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபாடு செய்தனர்.