பெங்களூர்: தனது உதவி இயக்குனருக்கு உதவும் வகையில் அவரது படத்தில் நடித்திருக்கிறார் ரிஷப் ஷெட்டி. காந்தாரா படத்தில் ஹீரோவாக நடித்து, அந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கியிருந்தார். ரூ.8 கோடியில் உருவான அந்த படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்தது. இப்போது ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றும் புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோவும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி அடுத்த என்ன படத்தில் நடிப்பார் என சினிமா ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர் சத்தம் இல்லாமல் ஒரு படத்தில் நடிக்க சென்றுவிட்டார். அது தனது உதவியாளராக இருந்த நிதின் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் படமாகும்.