குளித்தலை குளித்தலை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த பரளி கிராமத்தை சேர்ந்தவர்கள் சகோதரர்கள் நீலமேகம், மகேந்திரன். இவர்கள் இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை வீட்டினுள் பதுக்கி விற்பனை செய்து வந்துள்ளனர்.