உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்

வேலூர்: கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுத்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய காதலன் ஏற்பாடு செய்வதாக இளம்பெண், வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவருக்கும் குடியாத்தம் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2015ம் ஆண்டு தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை பார்க்க வேப்பங்குப்பத்திற்கு இளம்பெண் வந்துள்ளார். அப்போது, அவரது வீட்டின் எதிரே உள்ள காலிமனையில் கிரிக்கெட் விளையாட வரும் அதே பகுதியை சேர்ந்த முஜாமின்(29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது. இதையடுத்து இருவரும் வீட்டில் யாரும் இல்லாதபோது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இது அப்பெண்ணின் கணவருக்கு தெரிந்துள்ளது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இளம்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு முஜாமினிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், நாம் இருவரும் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்துள்ளேன். நீ உனது கணவரை விவாகரத்து செய்தால்தான் உன்னை திருமணம் செய்து கொள்வேன். அதன்பின்னர்தான் இந்த வீடியோவையும் அழிப்பேன். இல்லாவிட்டால் இதை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.
இதையடுத்து அப்பெண் தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார். அதன்பிறகு முஜாமினும், இளம்பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சிலகாலம் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். இந்நிலையில், முஜாமின் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக இளம்பெண்ணுக்கு தெரிய வந்தது. இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசில் இளம்பெண் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

The post உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார் appeared first on Dinakaran.

Related Stories: