இதையடுத்து மேலாளர், சென்னை விமான நிலைய மத்திய தொழிற் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து பார்சலை எடுத்து பார்த்துவிட்டு, அதில் வெடிகுண்டு ஏதாவது இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு, மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரிய வந்தது. பிறகு பாதுகாப்பு அதிகாரிகள், அந்த பார்சலை பிரித்து பார்த்தனர். அதனுள் 4 தங்கக்கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த பார்சலை பாதுகாப்பு அதிகாரிகள், சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தங்கக் கட்டிகளை ஆய்வு செய்தபோது, அந்த 4 தங்கக்கட்டிகள் மொத்த எடை ஒரு கிலோ 250 கிராம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.90 லட்சம்.
தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், தங்கக் கட்டிகளை கடத்தி வந்த மர்ம ஆசாமி யார் என்று விசாரணை நடத்துகின்றனர். சென்னை விமான நிலையத்தின் வருகை பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த தங்க கட்டிகள் துபாயிலிருந்து நேற்று அதிகாலை வந்த விமானத்தில், கடத்திக் கொண்டுவரப்பட்டிருக்கலாம். விமான நிலையத்தில் சுங்கச் சோதனை அதிகமாக இருந்ததால், கடத்தல் ஆசாமி கழிவறையில் உள்ள குப்பைத் தொட்டியில் மறைத்து வைத்துவிட்டு, அதன் பின்பு யார் மூலமாவது அதை வெளியே எடுத்து வர, திட்டமிட்டு இருக்கலாம் என்று தெரிய வருகிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
The post விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை appeared first on Dinakaran.