‘ரீல்ஸ்’ மோகத்தில் மனைவி கையை வெட்டிய கணவன்

குடியாத்தம்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பிச்சனூர்பேட்டையை சேர்ந்தவர் சேகர்(41), நெசவுத் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி(39). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களில் 2 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகள் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், ரேவதி கடந்த ஓராண்டாக சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார். இதை கணவர் சேகர் கண்டித்து வந்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு ரேவதி வழக்கம்போல் ரீல்ஸ் வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

இதை பார்த்த சேகர் அவரை கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சேகர், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார். இதில் அவரது கை துண்டானது. வலியால் கதறி துடித்த ரேவதி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சேகரை நேற்று கைது செய்தனர்.

The post ‘ரீல்ஸ்’ மோகத்தில் மனைவி கையை வெட்டிய கணவன் appeared first on Dinakaran.

Related Stories: