புதுடெல்லி: குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக எகிப்து அதிபர் அப்துல் பட்டா இந்த மாதம் இந்தியா வருகின்றார். இதேபோல் ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் அடுத்த மாதம் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீசி மார்ச்சில் இந்தியாவிற்கு வருகை புரிய உள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் மார்ச் முதல் வாரத்தில் இந்தியா வரலாம் என தகவல்கள தெரிவிக்கின்றன.