பாட்னாவில் சமுதாய கூடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து: பழைய பொருட்கள் அறையில் இருந்து தீ பரவியதாக தகவல்

பீகார்: பீகாரில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்து ஒன்றில் சமுதாய கூடம் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. பாட்னாவில் உள்ள அசோக் நகர் பகுதியில் ராஜாஉட்சவ் என்ற சமுதாய கூடம் இயங்கி வருகிறது. நள்ளிரவில் திடீரென இந்த சமுதாய கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்து 4 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போராடினர்.

பின்னர், மேலும் 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பழைய பொருட்களை போட்டு வைத்து இருந்த அறையில் இருந்து தீ பரவியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மண்டபம் தீக்கரையான நிலையில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. 

Related Stories: