மும்பை: டெல்லியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கஞ்சவாலாவில் புத்தாண்டு கொண்டாடிவிட்டு மது போதையில் திரும்பிக் கொண்டிருந்த 5 பேர் வந்த கார், திடீரென கட்டுப்பாடு இழந்து மொபட்டில் வந்து கொண்டிருந்த அஞ்சலி சிங் என்ற 20 வயது பெண் மீது மோதினர். இதில் அஞ்சலி சிங், காரின் அடிப்பகுதிக்குள் சிக்கிக் கொண்டார், அதை கவனிக்காத வாலிபர்கள், காரை மேலும் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர். இதில், அஞ்சலி சிங்கின் உடல் பல பாகங்களாக கிழிந்து சாலையெங்கும் ரத்தமும் சதையுமாக சிதறியது. 12 கிலோ மீட்டர் தூரம் அஞ்சலியின் உடல் இழுத்து செல்லப்பட்டது.