புதுடெல்லி: பொது சிவில் சட்டம் தொடர்பான விவகாரத்தில் அமைக்கப்பட்ட குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பொது சிவில் சட்டம் தொடர்பாக நீண்ட நாட்களாக நாடு முழுவதும் விவாதங்கள் இருந்து வரும் நிலையில், குஜராத் உத்தரகாண்ட் உள்ளிட்ட சில மாநிலங்கள் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக குழுக்களை அமைத்து இருந்தது. இதையடுத்து இந்த குழுக்களுக்கு எதிராக அனுப் பரண்வால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.