மணிப்பூர் முதல்வர் முன்பு 43 தீவிரவாதிகள் சரண்

இம்பால்: மணிப்பூரில்  பல்வேறு ஆயுத குழுக்களை சேர்ந்த 43 தீவிரவாதிகள்  முதல்வர் முன்னிலையில் நேற்று சரண் அடைந்தனர். இந்தியாவில் தடை செய்யப்பட்ட கங்கிலேய்பாக் யவோல் கன்பா லப் (கேஒய்கேஎல்) மக்கள் விடுதலை முன்னணி, கங்கிலேய்பாக் கம்யூனிஸ்ட் கட்சி(பிடபிள்யூஜி) ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி, கேசிபி(என்) மற்றும்  பிரிபாக்(பிஆர்ஓ) போன்ற ஆயுத குழுக்களை சேர்ந்த 43 தீவிரவாதிகள்   முதல்வர் பிரேன் சிங் முன்னிலையில் நேற்று சரணடைந்தனர்.சரண் அடையும் போது தங்களிடம் இருந்த 19 துப்பாக்கிகள்,17 கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை அவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: