திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த வாரம் கோட்டயத்தைச் சேர்ந்த அரசு மருத்துவமனை நர்சான ரஷ்மி என்பவர் அல்பாமா சிக்கன் மற்றும் குழிமந்தி பிரியாணி சாப்பிட்டு இறந்ததார். இதையடுத்து கேரளா முழுவதும் ஓட்டல்களில் சுகாதாரத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த ஏராளமான ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டன. இந்நிலையில் பிரியாணி சாப்பிட்டு மேலும் ஒரு கல்லூரி மாணவி இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு: கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள உதுமா பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சுபார்வதி (21). இவர் கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் ஆன்லைன் மூலம் குழிமந்தி பிரியாணி வாங்கினார்.