லண்டன்: டிவிட்டர் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் 20 கோடி பேரின் இமெயில் முகவரியை ஹேக்கர்கள் திருடி உள்ளனர். டிவிட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பிரச்னை மேல் பிரச்னை எழுந்து வருகிறது. தற்போது டிவிட்டர் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேலிய நாட்டின் சைபர் பாதுகாப்பு நிறுவனமான ஹட்சன் ராக்கின் இணை நிறுவனர் அலோன் கால் இதை உறுதிப்படுத்தி உள்ளார். இதன் மூலம் 20 கோடிக்கும் அதிகமான டிவிட்டர் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகளை ஹேக்கர்கள் திருடி அவற்றை ஆன்லைனில் பதிவிட்டுள்ளனர்.