சிவகிரி: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்தவர் முருகன். டிப்பர் லாரி டிரைவர். இவரது மனைவி மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த மீனா (எ) மீனாட்சி (28). வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா முமீனாள் (5), முகிஷா முமீனாள் (2) என 2 பெண் குழந்தைகள் இருந்தனர். மீனாவிற்கும், முருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட விரக்தியில் மீனா ஏற்கனவே தீக்குளிக்க முயன்றும், விஷம் அருந்தியும் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்று மீட்கப்பட்டுள்ளார்.