வேலூர்: தமிழ் நாட்டில் கடந்த 18 மாதங்களில் ரேசன் அரசி கடத்தலில் ஈடுபட்ட 14,576 பேர் கைது செய்யப்பட்டுளனர். தமிழ் நாட்டிலிருந்து வெளிமாநிலங்களுக்கு ரேசன் அரசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் குறித்து சிவில் சப்ளை சி.ஐ.டி போலீசார் தீவிர சோதனையில் வருகின்றனர். இவர்கள் கடந்த 18 மாதங்களில் ரேசன் அரிசி கடத்தியது தொடர்பாக 14,576 பேரை கைது செய்துள்ளனர். 1969 சமையல் சிலிண்டர்கள், 6 லட்சத்து 27 லிட்டர் கலப்பட டீசல், அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை, பாமாயில் என ஏராளமான அத்தியாவசிய பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.