புதுடெல்லி: ‘மீண்டும் காங்கிரசில் சேரும் திட்டம் எதுவும் இல்லை’ என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறினார். முன்னாள் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த குலாம் நபி ஆசாத் காங்கிரசில் முதல்வர் மற்றும் ஒன்றிய அமைச்சராக இருந்துள்ளார். கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் விலகி‘ஜனநாயக சுதந்திர கட்சி’ என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இந்நிலையில் குலாம் நபி ஆசாத் மீண்டும் காங்கிரசில் சேர உள்ளார். அடுத்த மாதம் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளது. அப்போது ஒற்றுமை யாத்திரையில் குலாம் நபி பங்கேற்பார் என தகவல்கள் வெளியானது.