டேராடூன்: டெல்லியில் இருந்து காரில் உத்தரகாண்ட் சென்ற போது இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பன்ட் விபத்தில் சிக்கினார். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட், டெல்லியில் இருந்து உத்தரகாண்டிற்கு இன்று அதிகாலை 5.30 மணியளவில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது டெல்லி டெஹ்ராடன் நெடுஞ்சாலையில், ஹம்மத்பூர் ஜால் என்னும் இடத்தில் கார் சென்று கொண்டிருந்த போது, திடீரென சாலையின் டிவைடரில் கார் மோதியதில் தீ விபத்து ஏற்பட்டது.