தாம்பரம்: சிட்லபாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்டேஷன் பார்டர் ரோடு - எம்.ஐ.டி சந்திப்பு அருகே உள்ள காலி மனையில் சுமார் 70 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கிடப்பதாக நேற்று முன்தினம் சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, வெள்ளை நிறத்தில் கருப்பு கோடு போட்ட லுங்கியும், நீல நிற டவுசர், கட்டம் போட்ட துண்டு, ரோஸ் நிரத்தில் முழுகை சட்டையும், வலது பக்க மார்ப்பில் எஸ்.விஜி எனவும், வலது புற முழங்கையில் எஸ்.விஜி எனவும் பச்சை குத்தியிருந்த முதியவர் சடலமாக கிடந்தது தெரிந்தது.