புதுடெல்லி: ‘இமாச்சல் காங்கிரசில் எந்த உட்கட்சி பூசலும் இல்லை’ என்று அம்மாநில முதல்வர் சுக்வீந்தர் சிங் சுக்கு தெரிவித்து உள்ளார். இமாச்சல் பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 62 தொகுதிகளில் 40 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து உள்ளது. முதல்வராக சுக்வீந்தர் சிங் சுக்கு பதவியேற்றார். இவர், நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இமாச்சலப் பிரதேச காங்கிரஸுக்குள் எந்த உட்கட்சி பூசலும் இல்லை. மாநிலக் கட்சித் தலைவர் பிரதீபா சிங் மற்றும் முகேஷ் அக்னிஹோத்ரி உட்பட வேறு சிலர் முதல்வர் பதவிக்கு உரிமைகோரியதால் மோதல் இருந்தது.