பாட்னா: ‘எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால் 2024 மக்களவை தேர்தலில் பாஜவுக்கு பாடம் புகட்டலாம்’ என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசி உள்ளார். பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய மாநாடு தலைநகர் பாட்னாவில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அம்மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் பேசியதாவது:
2005ம் ஆண்டிலோ, 2010ம் ஆண்டிலோ எந்த சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜ எங்களை விட அதிக இடங்களை வென்றதில்லை. அதன்பின் 2020 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணியில் இருந்து கொண்டே எங்களுக்கு எதிராக பாஜ சதி செய்தது.