புதுடெல்லி: கொல்லிமலை பழங்குடி மக்களுக்கான ஒதுக்கீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டுமென மாநிலங்களவையில் திமுக எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ் குமார் கோரிக்கை விடுத்துள்ளார். மாநிலங்களைவையில் திமுக எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் விடுத்த சிறப்பு கோரிக்கையில், ‘நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை மலை பகுதியில் 14 குக்கிராமங்களில் 35 ஆயிரத்திற்கும் மேலான பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஸ்மார்ட் கல்வி, டெலி மருத்துவம், இன்டர்நெட் வசதி, வணிக ரீதியான பொருட்கள், மருத்துவம் ஆகிய தேவைகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதற்கான முன்மொழிவை தமிழக அரசு தரப்பில் ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஒதுக்கீட்டு நிதியை ஒன்றிய பழங்குடியினர் துறை அமைச்சகம் விரைந்து அங்கீகரித்து வழங்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.