மகாராஷ்டிரா-கர்நாடகா முதல்வர்களுடன் அமித்ஷா 14ல் பேச்சு

மும்பை: மகாராஷ்டிரா, கர்நாடகா இடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. சமீபத்தில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்திய போது, மகாராஷ்டிரா பதிவு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தலையிட வலியுறுத்தி மகாராஷ்டிரா விகாஸ் அகாடி (சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ்) கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் குழு டெல்லியில் நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து முறையிட்டனர். பின்னர் பேட்டி அளித்த தேசியவாத காங்கிரஸ் எம்பி அமோல் கோல்கே, ‘‘இரு மாநிலங்களின் முதல்வர்களுடன் வரும் 14 ம்தேதி அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: