காஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி: ராஜஸ்தானில் சோகம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின் போது இரண்டு காஸ் சிலிண்டர்கள் திடீரென வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சுமார் 50 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘திருமணத்திற்காக உணவு தயார் செய்யும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த காஸ் சிலிண்டர்களில் ஏற்பட்ட கசிவால், பெரும்விபத்து நடந்தது. விபத்தின் தாக்கத்தால் வீட்டின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தது. 12 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் 2 குழந்தைகள் பலியாகினர்’ என்றனர்.

Related Stories: