மதுரை: தமிழ்நாட்டில் 68 இடங்களில் மெகா வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தியதன் மூலம், ஒரு லட்சத்து 11 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக தொழிலாளர் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்தார். மதுரையில் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை மற்றும் மருந்தகம் (இஎஸ்ஐ) பழங்காநத்தம், மணி நகரத்தில் உள்ளது. இவற்றில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கை கழுவும் இடம் மோசமாக இருந்தது. அதை அவரே சுத்தப்படுத்தினார். பின்னர் அவர் கூறுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் அளவுக்கு அதிகமாக மருந்துகள் கொள்முதல் செய்து முறைகேடு செய்தவர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்.