டெல்லி: உச்சநீதிமன்றத்துக்கு புதிய செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். supreme court mobile app 2.0 என்ற பெயரில் பிளே ஸ்டோரில் புதிய செயலி கிடைக்கும் என தலைமை நீதிபதி தெரிவித்திருக்கிறார். அரசு சார்ந்த அனைத்து துறைகளின் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்கள் புதிய செயலியில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.