அம்பேத்கரின் போராட்டங்கள் நம்பிக்கை அளித்தன: மோடி

புதுடெல்லி: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய  அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோருடன் நாடாளுமன்ற வளாகத்தில்  மலர் தூவி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து அவா் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,’ டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.

நம் தேசத்திற்கு அவர் செய்த முன்மாதிரியான சேவையை நினைவு கூர்கிறேன். அவரது போராட்டங்கள் லட்சக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையை அளித்தன. மேலும் இந்தியாவுக்கு இவ்வளவு விரிவான அரசியலமைப்பு சட்டத்தை வழங்குவதற்கான அவரது முயற்சிகளை ஒருபோதும் மறக்க முடியாது’என்று கூறியுள்ளார்.

Related Stories: