புதுடெல்லி: வெளியுறவு துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அன்னலேனா பேயர்போக் இருதரப்பு உறவு உள்பட பல விஷயங்கள் குறித்து பேச்சு நடத்தினார். ஜெர்மனி வெளியுறவு துறை அமைச்சர் அன்னலேனா பேயர்போக் இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லியில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து ஜெர்மனி வெளியுறவு துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், ஜெர்மனி இந்தியாவின் இயற்கை பங்குதாரர். 21ம் நுாற்றாண்டில் உலகளாவிய விவகாரங்களில் தீர்வு காண்பதில் இந்தியாவின் செல்வாக்கு முக்கியமானதாக இருக்கும். இந்திய அரசு தனது நாட்டு மக்களை தவிர ஜி-20 அமைப்பிலும் பல முக்கிய திட்டங்களை செயல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது.