மது குடிக்க கட்டாயப்படுத்தி காதுகேளாத சிறுமி 3 வாலிபர்களால் பலாத்காரம்: பீகாரில் கொடூரம்

பாட்னா: பீகாரில் காது கேளாத சிறுமியை அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் மோதிஹாரி அடுத்த சங்கராம்பூர் கிராமத்தை சேர்ந்த காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத 16 வயது சிறுமியை, அதே கிராமத்தை சேர்ந்த மூன்று வாலிபர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் மது போதையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிவிட்டனர். பல மணிநேரமாகியும் தங்களது மகள் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பல இடங்களில் தேடி பார்த்த போது, கிராமத்தின் ஒதுக்குபுறமான இடத்தில் சுயநினைவின்றி சிறுமி கிடந்தார்.

அதை பார்த்த பெற்றோர், உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்த போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் குறித்து அரேராஜ் போலீஸ் டிஎஸ்பி ரஞ்சன் குமார் கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட மூன்று குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தலைமறைவாக  உள்ளதால், அவர்களை தேடி வருகிறோம். பாதிக்கப்பட்ட சிறுமியை மது குடிக்க கட்டாயப்படுத்தி, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கிட்டத்தட்ட 12 மணி நேரம் சுயநினைவின்றி இருந்த சிறுமி, தற்போது படிப்படியாக குணமடைந்து வருகிறார்’ என்றார்.

Related Stories: