பாட்னா: பீகாரில் காது கேளாத சிறுமியை அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் மோதிஹாரி அடுத்த சங்கராம்பூர் கிராமத்தை சேர்ந்த காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத 16 வயது சிறுமியை, அதே கிராமத்தை சேர்ந்த மூன்று வாலிபர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் மது போதையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிவிட்டனர். பல மணிநேரமாகியும் தங்களது மகள் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பல இடங்களில் தேடி பார்த்த போது, கிராமத்தின் ஒதுக்குபுறமான இடத்தில் சுயநினைவின்றி சிறுமி கிடந்தார்.