நாகை ரேசன் கடைகளில் 5 கிலோ எடை கேஸ் சிலிண்டர் விற்பனை

நாகை: நாகையில் ரேஷன் கடைகள் மூலம் 5 கிலோ எடைகொண்ட கேஸ் சிலிண்டர் விற்பனை தொடக்க விழா நேற்று நடைபெற்றது.  கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏக்கள் நாகைமாலி, முகமது ஷாநவாஸ், நகரமன்றத் தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவுசங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அருளரசு வரவேற்றார்.

விழாவில் 5 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விற்பனையை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து பேசியதாவது:

கூட்டுறவுதுறையின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள், சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மூலம் 5 கிலோ எடைகொண்ட கேஸ் சிலிண்டர் விற்பனை திட்டம் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து நாகை மாவட்டத்தில் உள்ள பொதுப்பணியாளர்கள் கூட்டுறவு பண்டகசாலையில் நடத்தப்படும் ரேஷன் கடையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள், சிறு வியாபாரிகள் எவ்வித முன்பதிவுமின்றி இந்த 5 கிலோ எடை சிலிண்டரை ரூ.1499-ஐ செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

எரிவாயு தீர்ந்த காலி சிலிண்டரை திரும்பகொடுத்து ரூ.555-ஐ செலுத்தி புதிய சிலிண்டரை கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் வசதிக்கேற்ப காலியான சிலிண்டரை எந்த இடத்திலும் (பெட்ரோல் பங்குகள், வெளிமாவட்டங்களிலும்) கொடுத்து புதிய எரிவாயு நிரப்பப்பட்ட உருளையினை எரிவாயுக்கான தொகையை மட்டும் கொடுத்துபெற்றுக்கொள்ளலாம் என்றார்.

Related Stories: