திருவனந்தபுரம்: விழிஞ்ஞம் கலவரம் சிலரின் திட்டமிட்ட சதி என்றும், போலீசார் அமைதி காத்ததால் தான் கடும் விளைவுகள் தவிர்க்கப்பட்டது என்றும் கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறினார். விழிஞ்ஞத்தில் அதானி துறைமுகத்திற்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் திருச்சூரில் பயிற்சி முடிந்த மகளிர் போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் முதல்வர் பினராய் விஜயன் பேசியதாவது: மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் விழிஞ்ஞத்தில் கலவரம் நடத்த திட்டமிடப்பட்டது.