பெரம்பூர்: சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த 22 வயது பெண், செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது; கடந்த 2018ம் ஆண்டு வியாசர்பாடி சர்மா நகர் எஸ்ஏ.காலனி பகுதியை சேர்ந்த பார்த்திபன் (21) என்பவருடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதன்பின்னர் இருவரும் காதலித்து வந்தோம். ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த நிலையில், பார்த்திபன் வீட்டில் யாரும் இல்லாதபோது என்னை அங்கு வரவழைத்து தாலி கட்டினார். இதன்பின்னர் கோவளம் பீச்சுக்கு அழைத்துச்சென்று அங்கு வைத்து பலமுறை உடலுறவு கொண்டார். இதன்பிறகு என்னை திருமணம் செய்ய மறுக்கிறார்.