சரண்: காதல் விவகாரத்தால் பீகாரை சேர்ந்த ஒரு பெண்ணை 5 பேர் கொண்ட பெண்கள் அடித்து துவைத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தைச் சேர்ந்த 5 இளம்பெண்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெண்ணை மிருகத்தனமாக அடித்து உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர்கள் ஒரு பெண்ணை பிடித்து, அவரின் தலைமுடியை பிடித்து அடிக்கிறார். மற்றொருவர் உதைக்கிறார்; இன்னும் சிலர் குத்துகிறார்கள். அவர்களில் ஒருவர் அந்தப் பெண்ணை கீழே தள்ளிவிட்டு உதைக்கிறார். இந்த சண்டைக்கு மத்தியில், அந்தப் பெண்ணுடன் இருந்த இளைஞன் ஒருவனையும் பிடித்து அடிக்கின்றனர்.