வேலூர்: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் டிஆர்ஓ ராமமூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட திட்ட இயக்குநர் ஆர்த்தி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று மனுக்களை பெற்றனர். கூட்டத்தில், வேலூர் அடுத்த இடையன்சாத்து பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ பிச்சாண்டி(72) என்பவர், அளித்த மனுவில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நான், 35 ஆண்டுகள் காவலராக பணியாற்றி எஸ்ஐயாக பதவி உயர்வு பெற்று கடந்த 2009ல் ஓய்வு பெற்றேன். 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். மகனுடன் வசித்து வருகிறேன்.