புதுடெல்லி: டெல்லி புதிய தமிழ்நாடு இல்லத்தில் போலி ஆவணங்களை காட்டி சிபிஐ அதிகாரி போன்று தங்கியிருந்த ஆந்திராவை சேர்ந்த நபரை சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளது. டெல்லி சாணக்கியாபுரியில் புதிய தமிழ்நாடு இல்லம் உள்ளது. இங்கு முதல்வர், மாநில அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் அரசு நிமித்தமான வேலைக்கு வரும்போது அறை எடுத்து தங்குவது வழக்கமாகும். இந்த நிலையில், டெல்லி புதிய தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த போலி சிபிஐ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடந்த முதல் கட்ட விசாரணையில் அவர் ஆந்திராவை சேர்ந்த நிவாச ராவ் ஐ.பி.எஸ் என்ற பெயரில் அறை எடுத்து, எண் 305 தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் சிபிஐ அலுவலகத்திற்கு சென்ற அவர் போலியான ஆவணங்களை காட்டி உள்ளே செல்ல முயன்றார். அவர் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதி மறுத்த சி.பி.ஐ அதிகாரிகள், இன்னொரு நாள் அனுமதி தருகிறோம் என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.