பெங்களூரு: பெங்களூருவில் கடன் தொல்லையில் சிக்கி தவித்த ஐ.டி. ஊழியர் ஒருவர் உணவுக்கு கூட பணம் இல்லை என கூறி தனது இரண்டு வயது குழந்தையை கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. குஜராத்தை சேர்ந்த ராகுல் என்பவர் தனது மனைவி மற்றும் 2 வயது மகளுடன் பெங்களூருவில் வசித்து வந்தார். ஐ.டி. ஊழியரான ராகுல் 6 மாதங்களுக்கு முன்பு வேலையை இழந்துள்ளார். பிட்காயினில் முதலீடு செய்து பணத்தை இழந்த அவர், தனது சொந்த வீட்டிலேயே நகைகளை திருடி அடகு வைத்துவிட்டு காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே பணமின்றி தவித்த ராகுல், தனது மகளுடன் காரில் வெளியே சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்தார்.