புதுடெல்லி: சிறையில் இருக்கும் சத்யேந்தர் ஜெயினை திகார் சிறை கண்காணிப்பாளர் சந்திப்பது போன்ற காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சிறையில் சொகுசாக இருப்பது போன்ற வீடியோ அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் வீடியோவில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட கைதி ஒருவர் சத்யேந்தர் ஜெயினை மசாஜ் செய்வது, அடுத்த வீடியோவில் சிறப்பு உணவுகள் உள்ளிட்ட பல்வேறு சொகுசு வாழ்க்கை வாழ்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. சிறைத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தருக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து திகார் சிறைத்துறை கண்காணிப்பாளராக இருந்த அஜித் குமார் சஸ்பெண்ட செய்யப்பட்டார்.