ஷில்லாங்: துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியானதால் மேகாலயாவில் இன்று முதல் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. அசாம் - மேகாலயா எல்லையில் கடந்த செவ்வாய்க் கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் போலீஸ் சோதனை சாவடி, மூன்று போலீஸ் வாகனம் வன்முறையாளர்களால் தீவைத்து எரிக்கப்பட்டன. போலீசார் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால், தற்போது இருமாநில எல்லையிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.