நாகர்கோவில்: நாகர்கோவில், மீனாட்சிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள், கோட்டார் காவல் நிலையத்துக்கு நேற்று வருகை தந்து காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டனர். இன்ஸ்பெக்டர் ராமர் , சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் அழகு தண்டாயுதபாணி ஆகியோர் காவல் துறையினரின் செயல்பாடுகள், காவல் நிலையத்தில் அன்றாடம் நடைபெறும் பணிகள் குறித்து விளக்கினர்.
மாணவர்களுடன் உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள் வந்திருந்தனர். சுமார் 40 மாணவர்கள் வந்திருந்தனர். மாணவர்களிடம், யாரெல்லாம் போலீசாக விரும்புகிறீர்கள் என என எஸ்.ஐ. ஜெயகுமார் கேட்டார். அப்போது மாணவன் ஒருவன், நான் எஸ்.ஐ. ஆவேன் என்றார்.