போடி: வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழையால் சாலைகள் பல இடங்களில் சேதடைந்துள்ளன. இதையடுத்து சேதமடைந்த சாலைகளை சீரமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், போடி மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி விலக்கிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை குடிநீர் குழாய், பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி மற்றும் தொடர் மழையால் சாலை குண்டும் குழியுமாக மாறியது. இதனை ஜேசிபி இயந்திரம் மூலம் சமப்படுத்தி போடி நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக சீரமைத்தனர்.