திருப்புவனம் : திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் 20 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட சிற்பத்தை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருப்புவனம் அருகே செல்லப்பனேந்தல் பகுதி வைகை ஆற்றில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மணல் குவாரி அமைத்து லாரியில் மணல் அள்ளப்பட்டது. அப்போது இரண்டு அடி உயரத்தில் 3 அடி நீள கல்லில் மூன்று புடைப்பு சிற்பங்கள் செதுக்கப்பட்டு நடுவில் ஒரு பெண் சிலையும் இருபுறமும் ஒரு ஆண் மற்றொருபுறம் ஒரு பெண் உருவம் பொறிக்கப்பட்ட சிலை கண்டெடுக்கப்பட்டது. அது மெயின் ரோட்டில் உள்ள ஒரு மரத்தடியில் இருந்த பிள்ளையார் கோயிலில் வைத்து அம்மனாக செல்லப்பனேந்தல் மக்கள் வழிபாடு செய்து வருகிறனர்.