கோத்தகிரி: கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்தது. வனத்துறை இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் சமீபகலமாக சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் நுழைவது வாடிக்கையாக உள்ளது. கடந்த வாரம் இங்குள்ள ஒரசோலை காமராஜர் நகரில் ஆடு, வளர்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடியது. இந்நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு தேயிலைத்தோட்ட முட்புதரில் தூர்நாற்றம் வீசியது.