பிரியாணிக்காக சண்டை: கணவரும் உயிரிழப்பு

சென்னை: சென்னை அயனாவரத்தில் பிரியாணி கேட்ட மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த கணவர் கருணாகரனும் இன்று உயிரிழந்தார். கருணாகரனின் மனைவி பத்மாவதி பிரியாணி கேட்டதால் ஆத்திரமடைந்த கணவர் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். தீயில் எரிந்து கொண்டிருந்த போது பத்மாவதி கணவர் கருணாகரனை கட்டிப்பிடித்தாள் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பத்மாவதி உயிரிழந்த நிலையில் கணவர் கருணாகரனும் இன்று உயிரிழந்தார்.

Related Stories: