திருச்சி: பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்; அதிமுகவை யாராலும் மிரட்ட முடியாது. அதிமுக தொண்டர்களை யாராலும் பிளவுப்படுத்தி பார்க்க முடியாது. அதிமுக இடத்தை பாஜக பிடிக்க பார்க்கிறது என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதிமுகவின் ஒற்றுமையை பாஜக சீர்குலைக்கவில்லை. அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக நிற்கின்றனர். தலைமையில் பிரச்சனை இருப்பது போல மாயத்தோற்றம் நிலவுகிறது.