மும்பை: தெலுங்கானா மாநிலத்தில் நடைப்பயணத்தை நிறைவு செய்ய உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று இரவு மராட்டியத்தில் தனது பயணத்தை தொடங்குகிறார். நாடு தழுவிய பாத யாத்திரையை ராகுல் காந்தி செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். கேரளா, கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில் நடைப்பயணத்தை நிறைவு செய்த ராகுல் இன்று இரவு மராட்டிய மாநிலத்தில் 61-வது நாள் நடைப்பயணத்தை தொடங்க இருக்கிறார். இரவு 9 மணியளவில் தெலுங்கானாவில் உள்ள காமரெட்டியில் இருந்து மராட்டியத்தில் நாந்தெட் மாவட்டத்தில் உள்ள தெக்லுர் பகுதியை ராகுல் அடைய இருக்கிறார்.
