கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுளளன. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களில் மிக முக்கியமானது பிரையன்ட் பூங்கா. இந்த பூங்காவில் இதுவரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு உள்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை கருதி, 2 மாதங்களுக்கு முன்பு இந்த பூங்காவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி துவங்கியது. தற்போது இந்த பணி நிறைவடைந்தது.