ராமேஸ்வரம்: இரண்டு குழந்தைகள் உள்பட 10 இலங்கை தமிழர்கள் இன்று காலை அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர். அவர்களை மரைன் போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் தற்போது நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடியினால் இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வந்தம் வண்ணம் உள்ளனர். கடந்த சில மாதங்களில் 200க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர். இந்தநிலையில் இன்று காலை 2 குழந்தைகள், 5 பெண்கள் உட்பட 10 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர். அவர்களை ராமேஸ்வரம் மரைன் போலீசார் மீட்டனர்.