புதுடெல்லி: குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்ட தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இதனால், இம்மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. டெல்லி, பஞ்சாப்பில் ஏற்கனவே ஆட்சியை பிடித்துள்ள ஆம் ஆத்மி, குஜராத் தேர்தலில் ஆட்சியை பிடிக்க தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. இக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத்தில் செல்வாக்கு அதிகமாகி வருகிறது. இதனால், இத்தேர்தலில் இக்கட்சி பாஜ.வுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.